‘மிக்ஜாம்’ புயல் ஆந்திராவின் பாபட்லா என்ற இடத்தில் கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மய்யம் தகவல்

1 Min Read
இந்தியா, தமிழ்நாடு

சென்னை, டிச.5 ‘மிக்ஜாம்’ புயல்  ஆந்திராவின் பாபட்லா என்ற இடத்தில் கரையை கடக்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. 

வங்கக் கடலில் உருவான ‘மிக்ஜாம்’ புயல் ஆந்திராவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மிக்ஜாம் புயல் அடுத்த சில மணி நேரத்தில் கரையை கடக்க வுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. ஆந்திர மாநி லம் பாபட்லா என்ற இடத்தில் மிக்ஜாம் புயல் கரையை கடக்கிறது. இதனால் அப்பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மய்யம் தகவல் தெரிவித்துள்ளது.

‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஆந்திரா வின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஆந்திர மாநிலம் நெல் லூரில் 28.9 செ.மீ. மழையும், பாபட்லாவில் 21 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளதாக அம்மாநில வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. இதேபோல் ஆந்திரா வில் புயல் கரையை கடக்கும் பகுதியில் மணிக்கு 110 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசி வருவதாகவும் வானிலை மய்யம் தகவல் தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் இன்று (5.12.2023) ஆந்திராவின் பாபட்லா வில் கரையை கடக்கும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *