மேனாள் சட்டமன்ற உறுப்பினர் மதுரை தெய்வநாயகம் மறைவுக்கு தமிழர் தலைவர் இரங்கல்

Viduthalai
1 Min Read

மதுரை மத்திய தொகுதியில் மூன்று முறை காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் தெய்வ நாயகம். (வயது 85)  உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.தமிழர் தலைவர் அவர்களோடு அன்போடு பழகக் கூடியவர். தமிழர் தலைவர் அவர்கள் அரசு முறைப்பயணமாக சோவியத்ரஷ்யாசென்றபோது மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் ஏஜி.சுப்புராமன், தெய்வநாயகம் ஆகியோர் உடன் சென்றதை அடிக்கடி நினைவுகூர்வார்.

மறைவுச் செய்தியறிந்த தமிழர் தலைவர் அவர்கள் தொலை பேசி மூலமாக அவர் மகன் ராமு பிச்சையிடம் இரங்கல் தெரிவித்தார்.அவர்களின் இல்லத்திற்கு தலைமை கழக அமைப்பாளர் வே.செல்வம் மாவட்டத் தலைவர் அ.முருகானந்தம், மாவட்ட செயலாளர் சுப.முருகானந் தம்ஆகியோர் சென்று திராவிடர் கழகத்தின் சார்பில் இரங்கல் தெரிவித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *