பெரியார் திடல் நூலகர் கோவிந்தனின் தாயார் சுந்தராம்பாள் மறைவு! கழக பொறுப்பாளர்கள் இறுதி மரியாதை

Viduthalai
1 Min Read

திராவிடர் கழகம்

சென்னை பெரியார் திடல் நூலகத்தின் நூலகர்  கே.கோவிந்தனின்  தாயார், அம்மையார் சுந்தராம்பாள் தர்மபுரி மாவட்டத்தில்  உள்ள வெள்ளாளப்பட்டி கிராமத்தில், 3.12.2023  அன்று இயற்கை எய்தினார். கழக துணைத் தலைவர் கவிஞர் அவர்களின் வழிகாட்டுதல் படி, திராவிடர் கழகத்தின் சார்பாக, 4.12.2023 அன்று காலை 9 .30 மணி அளவில் தருமபுரி மாவட்ட தலைவர் கு.சரவணன் தலை மையில், தலைமை கழக அமைப்பாளர்.ஊமை ஜெயராமன் மாலை அணிவித்து, இறுதி மரியாதை செலுத்தினார். மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, நகர திராவிடர் கழக தலைவர் கரு . பாலன், இர. கிருஷ்ணமூர்த்தி, ஓட்டுநர் அம்ஜத் பாட்ஷா ஆகியோரும்  கலந்து கொண்டு வீரவணக்கம் முழக்கமிட்டனர் . நூலகர் கோவிந்தனுக்கு கழக பொறுப்பாளர்கள் ஆறுதல் கூறினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *