2024 பிப்ரவரி மாதம் தேர்வு – ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு

Viduthalai
1 Min Read

புதுடில்லி, டிச. 3- மத்திய காவல் படை களில் கான்ஸ்டபிள் உள்ளிட்ட பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய் வதற்கான கணினி அடிப்படையிலான போட்டித் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பை 24.11.2023ஆம் தேதி வெளியிட் டுள்ளது.

விண்ணப்பங்களை ssc.nic.in என்ற இணையதளம் மூலம் மட் டுமே சமர்ப்பிக்க வேண்டும். இணையவழியில் விண்ணப்பிப்ப தற்கான கடைசி தேதி 31.12.2023 ஆகும். இணையவழியில் கட்ட ணம் செலுத்துவதற்கான கடைசி தேதி 01.01.2024 ஆகும்.

இணையவழியில் விண்ணப்பப் படிவத்தில், தேர்வர்கள் ஸ்கேன் செய்யப்பட்ட வண்ண பாஸ் போர்ட் அளவு புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும், இது தேர்வு தேதி அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதங்க ளுக்கு மிகாமல் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். புகைப்படம் தொப்பி இல்லாமல் இருக்க வேண் டும், கண்ணாடி மற்றும் முகத்தின் முன் பார்வை தெரியும் வகையில் இருக்க வேண்டும்.

தென் மண்டலத்தில், கணினி அடிப்படையிலான தேர்வு 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி – மார்ச் மாதங்களில் 21 தேர்வு மய்யங்கள், நகரங்களில் நடைபெறும்: ஆந் திராவில் 10 மய்யங்கள்; தமிழ்நாட் டில் 7 மய்யங்களும், புதுச்சேரியில் 1 மய்யமும், தெலங்கானாவில் 3 மய் யங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *