தமிழ்நாட்டின் பொதுவாழ்க்கையில் உந்து சக்தியாக விளங்குபவர் போற்றுதலுக்குரிய டாக்டர் வீரமணி!

Viduthalai
1 Min Read

தமிழர் தலைவருக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து!

ஆசிரியர், இந்தியா, கடிதம்

புதுடில்லி, டிச.3 திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாளில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். ‘‘தமிழ்நாட்டின் பொதுவாழ்க்கையில் உந்து சக்தியாக டாக்டர் கி.வீரமணி திகழ்கிறார்; அவருக்கும், திராவிடர் கழகத்தின் பணிகள்- போற்றத்தக்க முயற்சிகளுக்கும்” வாழ்த்துக் கூறி, திருமதி சோனியா காந்தி அவர்கள் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:

ஆசிரியர், இந்தியா, கடிதம்

டாக்டர் கி.வீரமணி அவர்களின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாளான (டிச.2) நன்னாளில் எமது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். நல்ல உடல்நலத்துடனும், வருங்காலத்தில் நீண்ட நாள்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட விரும்புகிறோம்.

தமிழ்நாட்டின் பொது வாழ்க்கையில் மதிப்பிற்கும், போற்றுதலுக்கும் உரிய டாக்டர் கி.வீரமணி அவர்கள் ஓர் உந்து சக்தியாகவும், நல்ல சமூக அரசியல் தாக்கங்களை ஏற்படுத்திடுபவராகவும் விளங்கி வருகிறார். அவருடைய தலைமையில் திராவிடர் கழகம், சுயமரியாதை, சமூகநீதிக் கொள்கை வழிமுறைகளை தமிழ்நாட்டின் அனைத்துப் பிரிவு மக்களி டையே ஆழமாகப் பயன்படுத்தி வருகிறது.

இந்த நல்ல வாய்ப்பின்பொழுது திராவிடர் கழகத்தின் தோழர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் எமது வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களது போற்றத்தகு முயற்சிகள் வெற்றி பெற விரும்பி வாழ்த்துகிறோம்.

-இவ்வாறு பிறந்த நாள் வாழ்த்துக் கடிதத்தில் இந்திய காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *