சோலையார்பேட்டையில் “சுயமரியாதைச் சுடரொளி” ஜெகதாம்பாள் படத்திறப்பு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திராவிடர் கழகம்

திருப்பத்தூர், நவ. 30- திருப்பத்தூர் மாவட்ட கழக காப்பாளர் இரா.நரசிம்மனின் வாழ்வி ணையர்  சுயமரியாதைச் சுட ரொளி ஜெகதாம்பாள்  அவர்களின் படத்திறப்பு – நினை வேந்தல் நிகழ்வு, திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழக தலை வர் கே.சி.எழிலரசன் தலைமையில் 26.11.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு சோலையார் பேட்டை ஆர்.எஸ்.மஹாலில் நடைபெற்றது.

இந்நினைவேந்தலுக்கு வேலூர் மாநகர தலைவர் ந. சந் திரசேகரன் மற்றும் ஜெகதாம் பாள் அவர்களின் புதல்வர் வரவேற்பு நல்கினார்.

தலைமை கழக அமைப்பா ளர் கோ.திராவிட மணி, மாநில மகளிரணி பொருளா ளர் எ.அகிலா, மாவட்ட செயலாளர் பெ.கலைவாணன், மாவட்ட ப.க. தலைவர் சி.தமிழ்ச் செல்வன், மாவட்ட துணை தலைவர் தங்க அசோ கன், மாநில இளைஞரணி துணை செயலாளர் சி.ஏ.சிற்றர சன், கந்திலி ஒன்றிய தலைவர் பெ. ரா. கனகராஜ், மாவட்ட ப.க. செயலாளர் வே.அன்பு, துணை செயலாளர் பெ.பெரி யார் தாசன், மாவட்ட துணை தலைவர்  ஆம்பூர் பன்னீர் செல்வம், சோலையார் பேட்டை நகர தலைவர் 

கே.ராஜேந்திரன், காளிதாஸ் (நகர தலைவர் திருப்பத்தூர்), ரவி (நகர செயலாளர் ஆம்பூர்), விஜயா அன்பழகன் (மாவட்ட மகளிரணி அமைப்பாளர்), நா.சுப்புலட்சுமி (மாவட்ட எழுத்தாளர் மன்ற தலைவர்), கோ.திருப்பதி (மாவட்ட ஆசி ரியரணி தலைவர்), தா.பாண் டியன் (ஒன்றிய தலை வர்), 

க. மதியழகன் (நகர செய லாளர் சோலையார்பேட்டை), சிவக்குமார் (நகர அமைப்பா ளர் சோலையார்பேட்டை), அன்புச் சேரன் (நகர அமைப் பாளர்  வாணியம்பாடி), 

ரா. நாகராசன் (கந்திலி ஒன்றிய செயலாளர்) ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.

சுயமரியாதை சுடரொளி ஜெகதாம்பாள் படத்தை மேனாள் அமைச்சர் கே.சி.வீரமணி திறந்து வைத்து   நினைவேந்தல் உரையாற்றினர்.

மேலும் இந்நிகழ்வில் மாநில பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் அண்ணா சரவணன், தலைமை கழக ஒருங்கிணைப்பாளர் உரத்த நாடு குணசேகரன்,  

கழக பேச் சாளர் பெரியார் செல்வம்,  மேனாள் ஒன்றிய குழு தலைவர் கே. சி. அழகிரி, விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர் எம்.என்.  அன்பழகன், பால குணசீலன் ஆகியோர்கள் நினை வேந்தல் உரையாற்றினார்கள்.

மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் இரா. நரசிம்மன் நன்றி தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *