தூத்துக்குடி மாவட்ட கழகக் கலந்துரையாடல்

1 Min Read

திராவிடர் கழகம்

தூத்துக்குடி, ஜன. 10- தூத்துக்குடி மாவட்டத் திராவிடர் கழகக் கலந் துரையாடல் கூட்டம் தூத்துக்குடி பெரியார் மய்யம் அன்னை நாகம் மையார் அரங்கில் 7.1.2023 சனிக் கிழமை நண்பகல் 12 மணியளவில் நடைபெற்றது. 

மாவட்டத் தலைவர் மா.பால் ராசேந்திரம் தலைமையேற்றார்.மாவட்டச் செயலாளர் மு.முனிய சாமி அனைவரையும் வரவேற்றார். மண்டலத் தலைவர் சு.காசி முன் னிலையுரையாற்றினார்.மாநில அமைப்புச் செயலாளர் மதுரை வே.செல்வம் சிறப்புரை ஆற்றினார். 

கூட்டத்தின் நோக்கம் பற்றி இரா.ஆழ்வார், நாகராஜன், 

த.பெரியார்தாசன் ஆகியோர் கருத் துகளைத் தெரிவித்தார்கள்.இறுதியாக இ.ஞா.திரவியம் நன்றி கூற நிகழ்ச்சி நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் சு.திருமலைக்கும ரேசன், மா.தெய்வப் பிரியா, கனிஷ்டா, கி.கோபால்சாமி, மோ. அன்பழகன், கி.கலைச் செல்வன், பொ.போஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *