ஆன்லைன் விளையாட்டுக்கு தடை இல்லை: ஒழுங்குபடுத்த ஆணையமாம்

1 Min Read

புதுடில்லி, ஜன. 14- ஆன்லைன் சூதாட்டம், விளையாட்டுகளுக்கு மாணவர்கள், இளைஞர்கள் உள் ளிட்ட ஏராளமானோர் அடிமை யாகி, லட்சக்கணக்கில் பணத்தை இழந்து, தற்கொலை செய்துகொள் ளும் நிலைக் குச் செல்கின்றனர். இந்நிலையில், ஒன்றிய அரசு கடந்த 2ஆம் தேதி ஆன்லைன் விளை யாட்டுகள் தொடர்பான வரைவு மசோதாவை வெளியிட்டது. அதில், ஆன்லைன் விளையாட்டு களை ஒழுங்குபடுத்த சுய ஒழுங்கு முறை ஆணையம் அமைக்க முன் மொழியப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியதாவது: ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் பதிவு செய்யப்படும் இந்த ஆணையம், ஆன்லைன் விளை யாட்டுகளுக்கு அனுமதி வழங்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கும். மேலும், விளையாட்டுகளின் உள்ளடக் கத்தைக் கண்காணிக்கும். இந்த ஆணையத்தில், ஆன் லைன் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கப் படாது. அனைவரது நலன்களை மய்யப்படுத்தி ஆணை யம் செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சட்டம் பிப்ரவரி மாதம் நிறைவேற்றப்பட்டும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தற் போது வரைவு மசோதா தொடர் பாக பெற்றோர், மாணவர்கள், கல்வியாளர் களிடம் கருத்து கேட் கப்படுகிறது. மேலும், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள், துறை சார் நிபுணர்கள், முதலீட்டாளர்களி டமும் கருத்து கேட்கப்படஉள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *