புதுடில்லி, ஜன. 18- கடந்த நிதியாண்டில் பா.ஜ.க. ரூ.1,917 கோடி நன்கொடை பெற்றதாகவும், காங்கிரசுக்கு ரூ.541 கோடி கிடைத்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-2022ஆம் நிதியாண்டில், அங்கீகரிக்கப்பட்ட 8 தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடை விவரத்தை தேர்தல் ஆணையம் நேற்று (17.1.2023) வெளியிட்டது. அதன்படி, ஆளுங்கட்சியான பா.ஜ.க., மொத்தம் ரூ.1,917.12 கோடி நன்கொடை பெற்றுள்ளது. அதில் தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டும் பெற்றது ரூ.1,033.7 கோடி ஆகும். அக்கட்சியின் செலவினமாக ரூ.854.46 கோடி இருந்துள்ளது. பா.ஜ.க.வுக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி ரூ.541.27 கோடி நன்கொடை பெற்றது. அதன் செலவுக்கணக்கு ரூ.400.41 கோடியாக இருந்தது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி பெற்ற நன்கொடை ரூ.2.87 கோடியாகவும், செலவு ரூ.1.18 கோடியாகவும் இருந்தது.
கடந்த நிதியாண்டில் பா.ஜ.க.வுக்கு நன்கொடை ரூ.1,917 கோடியாம்
1 Min Read
வரலாற்று நிகழ்வு
நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு
பொன்மொழிகள்
தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.
நல்ல நேரம்: 24 மணி நேரமும்
மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
