பாஜகவின் பொருளாதாரக் கொள்கை பெரு நிறுவனங்களுக்கு சாதகமானது: பினராயி விஜயன்

Viduthalai
1 Min Read

அரசியல், இந்தியா

கொச்சி, ஜன.19- பாஜக தலைமை யிலான ஒன்றிய அரசு கையாண்டு வரும் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கை பெரு நிறுவனங்களுக்கும் பெரும் பணக்காரர்களுக்கும் சாதகமா னது என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டினார்.

கொச்சியில் நடைபெற்ற இடதுசாரி ஆதரவு அரசு ஊழியர்கள் சங்கத்தின் வைர விழா நிகழ்ச்சியில் அவர் பேசிய தாவது:

அமைப்பு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பு என்பது வெகுவாக குறைந்து வருகிறது. ஒன்றிய அரசுத் துறையில் உள்ள 10 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பாஜக ஆட்சியில் பெருநிறுவ னங்கள் மட்டுமே வளர்ந்து வருகின்றன. ஏழை, எளிய மக்களின் வாழ்வில் மலர்ச்சி இல்லை. நமது நாட்டில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கையும், அவர்களிடம் குவிந்துள்ள பணத்தின் அளவும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் உலக பட்டினிக் குறியீட்டில் இந்தியா மோச மான இடத்தில் உள்ளது. வறுமையில் வாடுவோர் எண்ணிக்கை அதிகமுள்ள நாடுகள் பட்டியலிலும் இந்தியா இடம்பெற்றுள்ளது.

ஒன்றிய பாஜக அரசு பின்பற்றி வரும் நவீன தாராளமய பொரு ளாதாரக் கொள்கை பெரு நிறுவனங் களும், பெரும் பணக்காரர்களுக் கும் சாதகமாக உள் ளது. எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ஒன்றிய அரசிடம் உறுதியான கொள்கைகள் இல்லை. அதே நேரத்தில் பெரும் பணக்கார தொழிலதிபர்களுக்கு உதவும் விதமாக அனைத்து வகையிலும் அரசு செயல்படுகிறது என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *