ஒன்றிய, மாநில அரசுப் பணிகளில் தமிழ்நாடு மாணவர்கள் அதிகம் சேர சென்னை மாநிலக் கல்லூரியில் இலவச பயிற்சி

Viduthalai
3 Min Read

தமிழ்நாடு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, ஜன. 19- ஒன்றிய, மாநில அரசுப் பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிகளவில் சேரவேண்டும் என்று அமைச்சர் உதயநிதி வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை மாநிலக் கல்லூரியில் உள்ள அரங்கத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் நேற்று (18.01.2023) தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மய்யம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் அவர் பேசியது: “தமிழ்நாட்டில் மாணவ, மாணவியர், இளைஞர்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு பெற்று உயரிய நிலையை அடைகின்ற நோக்கில் தொழிலா ளர் நலன் மற்றும் திறன் மேம் பாட்டுத் துறை மற்றும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மய்யங்கள் மூலம் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

நான் சட்டமன்ற உறுப்பினராக ஆனவுடன் கரோனா காலத்தில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தி தந்தவர் நம்முடைய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் . தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் பங்கேற்ற 69 மெகா வேலைவாய்ப்பு முகாம்களும் மற்றும் 1000 சிறு வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டுள்ளது.

இதுவரையில், 1,12,500 நபர்க ளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது. வருகிற மே மாதத்திற் குள் ஒன்றரை லட்சம் இலக்கை அடைய நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது. மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் விரைவில் சென்னையில் நடத்தப்படும் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 11 தொழில் பயிற்சி நிலையங்கள் (மிஜிமி) தொடங்கி உள்ளோம். டாடா கன்சல்டன்சி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு தலா ரூ.30 கோடி மதிப்பீட்டில் அனைத்து தொழில் பயிற்சி நிலையங்களிலும் உயர் தொழில் நுட்ப பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.2800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள மாண வர்கள் மற்றும் இளைஞர்கள் குரூப் 1 மற்றும் குரூப் 2 போன்ற தேர்வுகளில் ஆர்வம் காட்டும் அளவுக்கு ஒன்றிய அரசு வேலை வாய்ப்புகளுக்கான யூபிஎஸ்சி ((ITI) போன்ற போட்டித் தேர்வுகளில் அக்கறை காட்டுவதில்லை. ஒன்றிய அரசுப் பணிகளில் 2.1 சதவீதம் நபர்கள் மட்டுமே தமிழ் நாட்டில் இருந்து தேர்வாகின்றனர். ரயில்வே மற்றும் வங்கி போன்ற ஒன்றிய அரசுப் பணிகளில் தமிழ் நாட்டில் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சேர்வதற்கு ஏதுவாக போட்டித் தேர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப் படும்.

இந்த மாநிலக் கல்லூரியில் சுமார் ரூ.64 கோடி மதிப்பீட்டில் 2000 நபர்கள் அமரக்கூடிய அள விலான கலையரங்கம் கட்டப்பட உள்ளது. இந்தக் கல்லூரியில் சிற்றுண்டி உணவகம்  (Canteen)  அமைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகளை நானே தொடங்கி வைப்பேன். மாணவர்கள் பள்ளி, கல்லூரி படிப்புகளுடன் வேலை வாய்ப்புகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கும் தங்களைத் தயார் படுத்தி கொள்ள வேண்டும்.

மேலும், அனைத்து அரசு மற் றும் அரசு உதவி பெறும் கல்லூரி களில் இதுபோன்ற போட்டித் தேர்வு பயிற்சி மய்யங்களை அமைத்திட நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்“ என்று அவர் பேசினார். தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிக் கையேட்டினை மாணவ, மாணவியருக்கு வழங்கினார். முன்னதாக, போட்டித் தேர்வுகளுக்கான புத்தகக் கண்காட்சியினைத் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *