சமூக ஊடகங்களிலிருந்து…

1 Min Read

இன்னுமா பார்ப்பனீயம் பார்ப்பனீயம்னு உருட்டுறீங்ன்னு கேட்கும் கனதனவான்களே ! நண்பர்களே !

ரங்கராஜ் பாண்டே பார்ப்பன மாநாட்டில் ஆணவத்தோடு பேசியது காதில் விழுந்ததா ?

குருமூர்த்தி, எச்.ராஜா, சு.சாமி வகையறாக்கள்  பேசுவது காதில் விழுகிறதா ?

சமூக வலைதளங்கள் பெருமளவு செயல்படும் இன்றைக்கே இவ்வளவு திமிரும் வன்மமும் காட்டும் இவர்கள்; தந்தை பெரியார் பணி துவக்கிய காலத்தில் எப்படி வெறியாட்டம் போட்டிருப் பார்கள் ?

அந்தக் கிழவனின் துணிவும் உறுதியும் விடாப்பிடியான போராட்டமும் – யோசித்தாலே மலைப்பாக இருக்கிறது.

“மோடி ஆட்சிக்காலமே நம் பொற்காலம்” என பாண்டே, குருமூர்த்தி கூட்டம் கூச்சலிடு வதை உணர்ந்து கொள் தமிழா !

வைதீக எதிர்ப்பு மரபு தமிழ்நாட்டில் இரண் டாயிரம் ஆண்டு பழைமையானது.அதனை மக்கள் இயக்கமாக மாற்றியவர் தந்தை பெரியார் பெரியார். அந்தப் பணியை இன்றைய தேவைக்கு ஒப்ப கூர்மைப் படுத்த வேண்டியதின் அவசர அவசியத்தை பாண்டேக்கள் நினைவூட்டி இருக்கிறார்கள்!

– சு.பொ. அகத்தியலிங்கம்

‘தீக்கதிர்’ ஏட்டின் மேனாள் பொறுப்பாசிரியர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *