ஒன்றிய அரசு மீது முதலமைச்சர் மம்தா குற்றச்சாட்டு

1 Min Read

இந்தியா

கொல்கத்தா, ஜன.21 ஓபிசி, சிறுபான்மையினருக்கான உதவித் தொகையை ஒன்றிய அரசு நிறுத்திவிட்டது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா   குற்றம் சாட்டி யுள்ளார்.

மேற்குவங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி), சிறுபான்மை யின மாணவ, மாணவி யருக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் மேதாசிறீ திட்டம் அலி பூர்தரில்  தொடங்கப்பட்டது. 

இந்த திட்டத்தை முதலமைச்சர் மம்தா தொடங்கிவைத்தார்.

அப்போது அவர் பேசும்போது, “ஓபிசி, சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித் தொகை திட்டங்களை ஒன்றிய அரசு நிறுத்திவிட்டது. மேற்குவங்க அரசு அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்து செல்லும். ஓபிசி, சிறுபான்மையினருக்கு மாநில அரசு கல்வி உதவித் தொகையை வழங்கும். நாங்கள் சமுதாயத்தை ஒன்றிணைக்க விரும்புகிறோம். பாஜக பிரிவினையை ஏற்படுத்த விரும்புகிறது” என்று தெரிவித்தார்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *