திராவிட முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி கருணாநிதி அவர்களின் பிறந்தநாளையொட்டி பெரியார் – அண்ணா – கலைஞர் இயக்கம் சார்பில் அதன் தலைவர் எ.த.இளங்கோ சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை குழந்தைகள் பிரி வில் மகளிர் மற்றும் குழந்தைகள் படித்து பயன்பெற திராவிடர் கழக வெளியீடுகளான விடுதலை நாளிதழ், உண்மை இருவார இதழ் மற்றும் பெரியார் பிஞ்சு மாத இதழ்களுக்கான ஓராண்டு சந்தா தொகை ரூ.3500/-த்தை திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் கவிஞர் வி.உ.இளவேனில் உள்ளார்.
தமிழர் தலைவரிடம் சந்தா வழங்கல்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books