பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஏமாற்றம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

 மல்யுத்த வீரர்கள் குமுறல்… 

புதுடில்லி, ஜன.23 மல்யுத்த பயிற்சிக்கு செல்லும் வீராங்கனைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.இதனை அடுத்து டில்லி ஜந்தர் மந்தரில் வினேஷ் போகத் தலைமையில் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களை ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூரிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றார் மேனாள் மல்யுத்த வீரரும் பாஜக-வைச் சேர்ந்தவருமான பபிதா போகத்.மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்த நிலையில் இதனை அமைச்சர் ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.

இந்த நிலையில் இந்திய மல்யுத்த சம்மேளன துணை செயலாளர் வினோத் தோமர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தவிர குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்படுவதாக அறிவிக்கப் பட்டது. இதனை அடுத்து பிரிஜ் பூஷன் மீது குற்றச் சாட்டு சுமத்திய வீரர்களை விசாரணைக்கு அழைக்காமல் லக்னோ நகரில் விசாரணைக் குழு தனது விசாரணையை துவங்கியுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மல்யுத்த வீரர்கள் பிரிஜ் பூஷனை பதவியில் இருந்து நீக்காமல், தங்களையும் விசாரணைக்கு அழைக்காமல் வஞ்சிக்கப்பட்டதாக குமுறிவருகின்றனர். தங்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியை அடுத்து   மீண்டும் போராட்டத்தை தொடங்க முடிவெடுத்துள்ளனர். மேலும் சில வீரர்கள் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் போக்கை கண்டித்து வேறு நாடுகளுக்கு சென்று விளையாட தேவையான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *