பாலியல் புகாரில் பாஜக மேனாள் நிர்வாகி கைது

1 Min Read

திருச்சி, ஜன. 24- திருச்சி கோட்டை கீழ ஆண்டார் வீதி பிடாரி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வினோத் (வயது 27). பாஜக மாநகர் மாவட்ட இளைஞரணி மேனாள் செயலாளராக இருந்த இவருக்கு, பிளஸ் 2 படிக்கும் ஒரு மாணவியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

அதன்பின், திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து, அந்த மாணவியை வினோத் பாலியல்ரீதியாக துன்புறுத் தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத்தில் மாணவி புகார் அளித்தார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு சிறீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாவட்ட குழந்தைகள் நலக்குழுமம் பரிந் துரைத்தது.

காவல் துறையினர் நடத்திய விசாரணையில், வினோத் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இருப்பது தெரிய வந்ததால் அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து நேற்று (23.1.2023) கைது செய்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *