விசித்திரமான காரணத்தைக் கூறி குடியரசு அலங்கார ஊர்தி அணிவகுப்பில் பஞ்சாப் மாநிலத்திற்கு ஒன்றிய அரசு தடை!

Viduthalai
2 Min Read

இந்தியா

புதுடில்லி, ஜன. 25  விசித்திரமான காரணத்தைக் கூறி, டில்லியில் நாளை நடைபெறும் குடியரசு அலங்கார ஊர்தி அணிவகுப்பில் பஞ்சாப் மாநிலத் திற்குத் தடை விதித்துள்ளது ஒன்றிய அரசு.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு நாள் அன்று குடியரசுத் தலைவர் கொடியேற்றி வைப்பார். அதனைத் தொடர்ந்து முப்படை மற்றும் அனைத்து மாநில வளர்ச்சி, சுற்றுலா மற்றும் அதன் புதிய திட்டங்கள் தொடர்பான மாதிரி களை ஊர்வலமாக கொண்டு வருவார்கள் 

 என்றுமே தடை செய்யாத பஞ்சாப் மாநில அலங்கார ஊர்தியை இந்த ஆண்டு தடை செய்துள்ளது அனைத்துத் தரப்பினரிடமும் பெரும் வியப்பை அளித்துள்ளது. 

இதற்குக் காரணம், குருநானக் தனது சீடர்களுக்கு போதிக்கும் காட்சியான கை மற்றும் விரல் போன்றவை அலங்கார ஊர்தியில் வைக் கப்பட்டிருந்தது.   அரசை நோக்கி இந்தக் கை கேள்வி எழுப்புவது போல் இருப்பதால், எந்த ஒரு காரணமும் கூறாமல், பஞ்சாப் மாநில அலங்கார ஊர்தியை நிராகரித்துள்ளது ஒன்றிய அரசு. இது தொடர்பாக பஞ்சாப் அரசியல் தலைவர்கள் ஒன்றிய அரசுக்குக் கண்டன அறிக்கை விடுத்துள்ளனர். 

  கடந்த ஆண்டு 75 ஆம் ஆண்டு ‘விடுதலை’ நாள் என்பதால் தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டு அலங்கார ஊர்தியில் தமிழ்நாட்டின் வேலூர் கோட்டையில் 1805 ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் புரட்சி, ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரமுடன் போர் புரிந்த மருது சகோதரர்கள், சிவகங்கையை மீட்ட வீரமங்கை வேலு நாச்சி யார், அவரது போர்ப் படையில் பெண்கள் படைக்குத் தலைமையேற்று, வெள்ளையர்களின் ஆயுதக்கிடங்கினை அழித்து வீர மரணம் அடைந்த குயிலி, ஆங்கிலேயர்களின் ஆட்சி யினை எதிர்த்துப் போரிட்டு, தூக்குக் கயிற்றினை வீரமுடன் ஏற்றுக்கொண்ட வீரபாண்டிய கட்ட பொம்மன், அவரது படையில் தளபதியாக விளங்கிய வீரன் சுந்தரலிங்கம், அன்னிய படை களை தனியாகச் சென்று அழித்த ஒண்டிவீரன், ‘வெள்ளையனே வெளியேறு’ என்று முதன் முதலாக வீர முழக்கமிட்ட மாவீரன் பூலித் தேவன், பாளையக்காரர்கள் ஆங்கிலேயர் களுக்கு கப்பம் கட்டுவதைத் தடுத்த கட்டா லங்குளம் மன்னர் மாவீரன் அழகு முத்துக்கோன், மாவீரர்கள் மருது சகோதரர்கள் உருவாக்கிய காளையார்கோவில் கோபுரம் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வரலாற்றை நம் கண் முன்னே கொண்டு வரும் வகையில், உயிரோட்டமாக சிலைகள் வடிவமைக்கப்பட்டு இருந்தன. 

ஆனால், ”இவர்கள் யாரையுமே இந்தியாவின் பிறபகுதிகளுக்குத் தெரியாது; அதற்கான விளக் கம் தேவைப்படுகிறது. நேரமின்மை காரண மாக தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி  நிராகரிக்கப்படு கிறது” என்று ஒன்றிய அரசு கூறியது.   இதனை அடுத்து தமிழ்நாடு முழுவதும் அந்த அலங்கார ஊர்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அனுப்பி வைத்தார். இதன் மூலம் ஒரே நாளில் நடக்கவிருந்த ஊர்வலம் ஒரு மாதகாலம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீதிதோறும், பள்ளி, கல்லூரிகள் தோறும் சென்று சேர்ந்தது குறிப் பிடத்தக்கது. 

இந்நிலையில் இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்பாடான அலங்கார ஊர்திகளுக்கு எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்காமல், ஒன்றிய அரசு அனுமதி கொடுத்தது. 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *