மாநிலங்கள் கடன் வாங்குவதில் ஒன்றிய அரசு தலையிடுவது ஏன்? பீகார் முதலமைச்சர் கேள்வி

2 Min Read

அரசியல், இந்தியா

பாட்னா,ஜன.26- மாநிலங்கள் கடன் வாங்குவதில் ஒன்றிய அரசு தலையிடுவதாக பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.

பீகாரில் பா.ஜ.க.வு டன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்து ஆட்சி அமைத்த அய்க்கிய ஜன தாதளம் கட்சி தலைவ ரும், முதலமைச்சருமான நிதிஷ்குமார், கடந்த ஆகஸ்டு மாதம் திடீரென கூட்டணி மாறினார். அவர் பா.ஜ.க. கூட்ட ணியை முறித்துக் கொண்டு, ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் மெகா கூட்டணியில் சேர்ந்து புதிய அரசை அமைத்தார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில், ஒன்றியத்தில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதி ராக எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் இணைக் கும் முயற்சியில் ஈடுபடப் போவதாக நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று (25.1.2023) அவர் பாட்னாவில் செய்தியா ளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் எழுப்பிய கேள்விகளும், அவர் அளித்த பதில் களும் வருமாறு:-

கேள்வி:– ஒன்றிய பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்:- ஒருவர் என்ன எதிர்பார்க்க முடியும்? பீகாருக்கு ஒன்றிய அரசு பெரிய அளவில் உதவ வேண்டும், சிறப்பு தகுதி வழங்க வேண்டும் என்று வைத்த கோரிக்கைகள் இன்னும் நிறை வேற்றப் படவில்லை.

கேள்வி:– ஒன்றியத்தில் ஆளும் கூட்டணியில் இருந்து நீங்கள் வெளி யேறிய பிறகு நிலைமை மோசமாக மாறிவிட் டதா?

பதில்:- நாங்கள் கூட் டணியில் ஒன்றாக இருந்த போதும் அவர்கள் மாநி லத்துக்கு என்று எதையும் செய்தது இல்லை. அவர் கள் அதைத்தான் இப் போதும் செய்கிறார்கள். ஏழ்மை நிலையில் உள்ள மாநிலங்களை முன்னேற் றாமல், அவர்கள் நாட்டை முன்னேற்றுவது குறித்து எப்படி எண்ண இயலும் என்பது எனக்கு வியப்பை அளிக்கிறது.

அவர்கள் பிரச்சாரத் தில் ஈடுபடுவதைத் தவிர வேறு எதையும் செய்வ தில்லை. அவர்கள் அரசி யல் ஆதாயம் எதிர்பார்க் கிற இடங்களில் மட்டுமே தங்கள் கவனத்தைச் செலுத் துகிறார்கள். அவர்கள் தங்கள் அரசியல் லாபங் கள் குறித்து மிகையாக மதிப்பிடுவதுபோல தெரிகிறது.

நம்மைப்போன்ற ஏழை மாநிலங்கள், தங் களைத்தாங்களே காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலைதான் உள்ளது. முன்பு ஒன்றிய நிதி இல்லாதபோது அதைக் கடன் வாங்கி ஈடுகட்டினோம். இப் போது அதுவும் நிறுத்தப் பட்டு விட்டது. இது போன்ற ஒன்றிய அரசின் தலையீட்டை நாங்கள் ஒருபோதும் பார்த்தது கிடையாது.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *