உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்க்க குழுஅமைப்பு

1 Min Read

புதுடில்லி, ஜன. 26- உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்க்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். டில்லி உயர்நீதிமன்றம் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று முன்தினம் (24.1.2023) பங்கேற்று பேசிய உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி சந்திர சூட், ‘ஆங்கிலத்தில் உள்ள சட் டங்களை 99 சதவீத மக்கள் புரிந்து கொள்ள முடியவில்லை. 

மக்கள் தாங்கள் பேசும் மொழியில் சட்டங்களை புரிந்து கொள்வது அவ சியம். இதன் ஒரு பகுதியாக உச்சநீதிமன்ற தீர்ப்புகளை இந்தி, தமிழ், குஜராத்தி, ஒடியா ஆகிய 4 மாநில மொழிகளில் மொழியாக்கம் செய்ய நீதிபதி ஏ.எஸ். ஓகா தலைமையில் குழு அமைக்கப் பட்டுள்ளது. 

இந்த குழுவில் கருநாடக உயர்நீதி மன்றம் நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ், என்.அய்.டி. தர்மிஸ்தா, அய்.அய்.டி. டில்லியை சேர்ந்த மித்தேஷ் கப்தா, ஏக். ஸ்டெப் பவுண்டேசன் விவேக் ராகவன், அகாமி நிறுவனத்தை சேர்ந்த சுப்ரியா சங்கரன் ஆகியோர் இடம்பெற்று உள் ளனர்.’ என அவர் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *