அன்று இனிப்பு – இன்று கசப்பா?

1 Min Read

 நரேந்திர மோடி 2013ஆம் ஆண்டு அகம தாபாத்தில் நடந்த ஒரு நிகழ்வில் பேசியது:

நான் பிபிசி நிகழ்ச்சியைப் பார்த்த பிறகு தான் நம்பிக்கை கொண்டேன். தூர்தர்சனைப் பார்த்து நம்பிவிடாதீர்கள். ஆகாசவாணி ரேடியோ கேட்டு நம்பிவிடாதீர்கள். நமது ஊரில் உள்ள பத்திரிகை என்ன செய்தி தரு கிறதோ அதை நம்பி விடாதீர்கள் எதையும் ஆய்வு செய்து நம்புங்கள்.

பிபிசி செய்தி நிறுவனம் சரியான செய்தி யைத் தரும். அது முழுமையான நம்பிக்கை யான உறுதியான செய்தியைத் தரும் என்று கூறியிருந்தார்.

அன்று பிபிசியைப் பற்றி அபார நம்பிக்கை மோடிஜிக்கு! அதே பிபிசி தான் இப்பொழுது மோடி பற்றிய ஆவணப் படத்தைத் தயாரித் துள்ளது.

அப்பொழுது இனித்தது – இப்பொழுது கசக்கிறது!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *