12 ஆம் வகுப்பில் உயிரியல் பாடம் படிக்காதவர்களும் மருத்துவம் பயிலலாமாம் மருத்துவ ஆணையம் அறிக்கை

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, நவ. 25- 12 ஆம் வகுப்பில் இயற்பியல் வேதியியல் மற்றும் உயி ரியல் படித்தவர்கள் மட் டுமே எம்பிபிஎஸ் படிக்க முடியும் என்ற நிலையில் தற்போது உயிரியல் படிக்காதவர்களும் மருத் துவர்கள் ஆகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 

இதுகுறித்து தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிப் பில், அறிவியல் குரூப்பில் உயிரியல் பாடம் எடுக் காமல் இயற்பியல், வேதி யியல் மற்றும் கணிதம் பாடங்கள் படித்தவர்கள் மருத்துவம் படிக்கலாம் என அறிவித்துள்ளது.

ஆனால் அதே நேரத் தில் உயிரியல் அல்லது உயிரி தொழில் நுட்பங்க ளுக்கான பிளஸ் டூ தேர்வை அங்கீகரிக்கப் பட்ட கல்வி வாரியத்தில் தனியாக எழுதி வெற்றி பெற வேண்டும் என்றும் அதன் பின்னர் அவர்கள் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கு  சேர்வதற்கான விண்ணப் பத்தை அளித்து நீட் தேர்வு எழுதி  மருத்துவம் பயிலலாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது 

இந்த புதிய உத்தரவு மூலம் 12ஆம் வகுப்பில் உயிரியல் பாடத்தை முதன்மை பாடமாக எடுத்து படிக்காதவர்கள் தனியாக உயிரியல் படித்து மெடிக்கல் கல் லூரியில் சேரலாம் என் பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. புதிய அறிவிப் பின் படி பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்கள் எடுத்து 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மருத்துவம் படிக்க  தனி யாக உயிரியல் பாடம் மட்டுமே படித்து பின் னர் நீட் எழுதி மருத்து வக்கல்லூரியில் சேரலாம் என்ற புதிய விதியை அறி முகப்படுத்தி உள்ளது. இதன் படி இனி உயிரியல் பாடங்களையும் நீட் கோச் சிங் மய்யங்கள் பணம் பிடுங்க புதிய வழியை ஒன்றிய அரசு திறந்துவிட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *