இந்துசமய அறநிலையத்துறையைப் பற்றி பாஜக அண்ணாமலைக்கு என்ன தெரியும்?

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சுகிசிவம் பேட்டி

கட்டுரை

சென்னை,ஜன.31- தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்துசமய அறநிலையத்துறையை ஒழிப்பதுதான் முதல் வேலை என்று பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை கூறியுள் ளார். அவரின் இந்த பேச்சை அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டித்துள்ளனர். இந்துசமய அறநிலையத்துறையை ஒழிப் பது என்ற பேச்சு, கோவில் சொத்துகளை தனிநபர்கள் கொள்ளையடிக்கவே உதவி செய்யும் என்று கடுமையாக விமர்சித் துள்ளனர்.  

இதுகுறித்து ஆன்மீக  பேச்சாளரும் அறநிலையத்துறை ஆலோசனைக்குழு உறுப்பினருமான சுகிசிவம் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 

அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா ஆகிவிடுவார். சித்தப்பா பெண்ணை எப்படி கல்யாணம் முடிப்பது என்று ஒருவன் கேட்டால் எவ்வளவு குழந்தைத்தனமாக இருக்குமோ, அவ் வளவு குழந்தைத்தனமானது பாஜக அண்ணாமலையின் பேச்சு. பாஜக ஆட் சிக்கு வந்தால் என்று அவர் கூறுவது கற்பனையின் உச்சம்.

பாண்டிச்சேரி கூட்டணி அரசில்  யார் இருக்கிறார்கள்? அங்குள்ள திருநள்ளாறு கோவில் யார் கட்டுப்பாட்டில் உள்ளது? முதலமைச்சர் ரங்கசாமி கூட்டணி அரசில்தானே  பாஜக உள்ளது. எனவே முதலமைச்சர் ரங்கசாமி ஹிந்துக் கோவில்களை ஹிந்துக்களிடமே விட் டுக்கொடுத்து விட்டு, திருநள்ளாறு கோவில் நிர்வாகத்தில் தலையிடக் கூடாது என்று பாஜக அறிக்கை வெளியிடுங்களேன். உங்கள் லட்சியம் நிறை வேறட்டுமே.  பாஜக ஆட்சி நடைபெறும் கருநாடக மாநிலத்தில் அரசு அதிகாரிகள் கோவில் நிர்வாக அதிகாரிகளாக இருக் கிறார்களா? இல்லையா? சொல்லுங்கள். கருநாடகாவிலும் பாண்டிச்சேரியிலும் இந்து  சமய அறநிலையத்துறை இருக்கிற போது, அங்கு சென்று பாஜகவினர் போராட்டம் நடத்துங்களேன்.  பாஜக ஆளும் மாநிலங்களில் இந்து சமய அற நிலையத்துறை இருக்கிறபோது, தமிழ் நாட்டில் மட்டும் இருக்கக்கூடாது என்று சொல்வது ஏன்? இந்து சமய அற நிலையத்துறை எப்போது உண்டானது? எதனால்  உண்டானது? இதனை முன் மொழிந்தவர்கள் யார் என்ற வரலாற்றை சரியாகப் படித்திருந்தால், இன்றைக்கு அப்படி பேசியிருக்க முடியாது. 

கோவில்களில் அரசு தலையிடக்கூடாது என்று கொள்கை முடிவு எடுத்தால், முதலில் எழும் கேள்வி என்பது கோவில்களை யாரிடம் ஒப் படைப்பது? இந்து  கோவில்களில் துணை ஆணையர்,  கூடுதல் ஆணையர் என்று அதிகாரிகளை நியமித்து அரசு, கோவில்களை நிர்வகித்து வருகிறது.   இந்தக் கோவில்களை யாரிடம் திருப்பிக் கொடுக்கப்போகிறார்கள்? கோவில் குருக்களிடமா? சிப்பந்திகளிடமா? ஊரில் உள்ள பணக்காரர்களிடமா? கோவிலுக்கு நன்கொடை கொடுத்தவர்களைக் கொண்டு ஒரு கமிட்டி அமைத்து அவர்களிடம் கோவில்களை கொடுக்கப் போகி றார்களா? வாய்க்கு வந்தபடி பேசுவது சுலபம். ஆனால் நடைமுறையில் கோவிலை யார் நிர்வகிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.  இந்து சமய அற நிலையத்துறையை கொண்டுவந்தவர் நாத்திகர்  அல்ல. இன்னும் சொல்லப் போனால் நாத்திகர்கள் இயக்கம்மீது கோபம் கொண்ட, முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தான் இதனை கொண்டுவந்தார். இந்த தகவல் எத்தனைப் பேருக்குத் தெரியும். கோவில் சொத்துகளை முதன்  முதலில் தனியாரிடம் மாற்றிக்  கொடுத்தவர்கள் ஆத்திகர்கள்தான்; நாத்திகர்கள் அல்ல. கோவிலுக்கு மற்றவர்களால் இனாமாக வழங்கப்பட்ட நிலங்களை தவறாக  பயன்படுத்தியது யார் என்பதை அறிய, கடந்த 200 வருட ஆவணங்களை எடுத் துப் பாருங்கள். நிறைய வழக்குகளை படித்துப் பார்த்த பிறகு இந்த முடிவுக்கு வருகிறேன்.

கோவில் சொத்துக்களை தவறாக பயன்படுத்தியது தெரிந்துதான், அது குறித்து அன்றைய முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்  சட்ட மன்றத்தில் பேசினார். அதிக தவறுகள் நடந்த பிறகுதான் கோவில் சொத்துக் களை அரசு காப்பாற்ற வேண்டும் என்ற  எண்ணம் உருவானது. கோவில்  நிர் வாகத்தில் தவறுகள் நடந்தால்  அதை சுட்டிக்காட்டி வெளிக்கொண்டு வந்து, சரி செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு, கோவில்களை தனியாரிடம் கொடுக்க வேண்டும் என்று பேசுவது முறையானது அல்ல. திருமலை நாயக்கர் கட்டிய கோவிலை யாரிடம் கொடுக்கப் போ கிறீர்கள்? சேர,சோழ,பாண்டிய மன் னர்கள் கட்டிய கோவிலை இன்று யாரிடம் கொடுக்கப் போகிறீர்கள்?  கோவிலை தனியாரிடம் கொடுங்கள் என்ற வாதமே, உணர்வை தூண்டுவ தற்கான, வெறியை தூண்டுவதற்கான வார்த்தையே. இது சரியான தீர்வு அல்ல.  திருவண்ணாமலை தீபத்திரு விழாவிற்கு வந்தவர்கள் 32 லட்சம் பேர். இவர்கள் வந்துசெல்வதற்கான ஏற்பாடுகளை செய்தது அரசுதான். கோவில் அரசு கட்டுப்பாட்டில் உள்ளதால்தான் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் இவ்வளவு மக்கள் வந்து செல்ல முடிகிறது. இதுவே கோவில் தனியாரிடம் இருந்தால் இதைச் செய்ய  முடியுமா? எதையாவது பிரச்சி னையை கிளப்பி சண்டை  போட நினைக்கிறவர்கள்தான் கோவிலை தனியாரிடம்  ஒப்படையுங்கள் என்று  பேசுகிறார்கள். இந்துசமய அறநிலையத் துறையின் 50 ஆண்டு கால வரலாறு தெரிந்தவர்கள் இப்படி பேசமாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *