சூத்திரர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், திராவிடர்களைத் தவிர அனைவரும் வெளிநாட்டினர்தான் சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் பதிலடி

Viduthalai
1 Min Read
இந்தியா

லக்னோ, பிப்.5 – “சூத்திரர்கள், தாழ்த்தப் பட்டவர்கள் மற்றும் திராவிடர்களைத் தவிர இந்தியாவிலுள்ள மற்ற அனை வருமே வெளிநாட்டினர்தான்” என்று சமாஜ்வாதி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.டி. ஹசன் தெரிவித்தார். 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடை பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆர்எஸ்எஸ் பொ துச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே உரையாற்றினார். அப் போது, “இந்தியாவில் வாழும் அனைத்து மக்களும் இந்துக்கள், ஏனெனில் அவர்களின் முன்னோர்கள் இந்துக்கள். அவர்களின் வழிபாட்டு முறை வேறு பட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே மரபணுவினர்  (DNA)” என தெரிவித்தார். 

இந்நிலையில், ஹோசபலேவின் பேச்சு க்கு, சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலை வர்களில் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பி னருமான எஸ்.டி. ஹசன் பதிலளித்துள் ளார்.  அதில், “சூத்திரர்கள், தாழ்த்தப்பட்டோர்கள் மற்றும் திராவிடர்களைத் தவிர இந்தியா வில் உள்ள அனைவரும் வெளிநாட்டினர் தான்; அவ்வாறு மத்திய ஆசியாவில் இருந்து வந்தவர்கள்தான் இந்து மதத்தை வளர்த்தனர். இதுதான் வரலாறு” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “பசுக்களின் பெயரில் அரசி யல் செய்வது மோசமானது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் முஸ்லிம்கள் இந்தி யாவுக்கு வந்தார்கள் என்றால், சவர்ண இந்துக்கள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மத்திய ஆசியாவில் இருந்து வந்தனர். ஆனால், உலகம் ஏற்றுக் கொள்ளும் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற செய்தியை உடைக்க முயற்சி நடக்கிறது” என்று குற்றம் சாட்டி யுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *