முகல் தோட்டத்துக்கு “அம்ரித் உத்யன்” என்று பெயர் மாற்றம் – வரலாற்றுப் பெயர்களை மாற்றுவதா?

Viduthalai
2 Min Read

குடியரசுத் தலைவருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடிதம்

புதுடில்லி,பிப்.5- குடியரசுத் தலை வர் மாளிகையில் உள்ள முகல் தோட்டத்திற்கு “அம்ரித் உத்யன்” என பெயர் மாற்றம் செய்ததற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஅய்) தேசிய செயலாளர் பினோய் விஸ்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் முகலாயர் காலத்தின் நினைவுகளை அழிக்க முயற்சிக்கும் இந்த முடிவு தன்னிச் சையானது என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான பினாய் விஸ்வம், குடியரசுத் தலை வருக்கு கடிதமும் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர், “இது போன்ற இடங்களின் பெயர்கள் நமது வரலாற்றின் குறிப்பிட்ட காலத்தின் வரலாறுகளை சித்தரிக் கின்றன.

இந்திய வரலாற்றில் முகலாயர் காலம் அழிக்க முடியாத ஒன்று. ஒரு பெரும் சாம்ராஜ்ய மாக, முகலாய அரசர்கள் நன்மை, தீமை என இரண்டு பக்கங்களையும் கொண்டிருந்தனர் என்பதை மறுக்க முடியாது. இந்த உண்மை ஹிந்து அரசர்களுக்கும் பொருந்தும்.

வரலாற்றில் இருந்து “முகல்” என்ற வார்த்தையை நீக்குவதை, இந்திய வரலாற்றை மீண்டும் எழுதி, தேசியத்தை மறுவரையறை செய்யும் ஒன்றாகவே பார்க்க முடியும்.

இந்த பெயர் மாற்றத்தி னால் டில்லி வரலாற்றின் மிக முக்கி யமான அங்கம் ஒன்றை நாம் இழந்து விட்டோம். உங்களைப் போன்ற உயர் பதவிகளில் இருப்ப வர்கள், இதுபோன்ற வகுப்புவாத செயல்பாடுகளுக்கு உறுதுணை யாக இருப்பது கெட்ட வாய்ப் பானது.

எனவே, பெயர் மாற்றபட்ட முடிவை மறுபரீசிலனை செய்ய வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக வரலாற்று ஆசிரியர் களையும் ஆய்வாளர்களையும் கலந்தாலோசிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

28.1.2023 அன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடிய ரசுத் தலைவரின் அதிகாரபூர்வ மாளிகையில் உள்ள முகல் தோட்டம் உள்ளிட்ட 6 தோட்டங் களுக்கு அம்ரித் உத்யன் என்று பெயர் மாற்றினார்.

இந்திய சுதந்தி ரத்தின் 75ஆவது ஆண்டை கொண்டாடும் அமிர்த கால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட் டுள்ளது.

குடியரசுத் தலைவர் மாளிகை யின் அடையாளமாக அறியப்படும் அம்ரித் உத்யன் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள “முகல் தோட்டம்” சுமார் 15 ஏக்கரில் விரிந்து கிடக்கிறது.

முன்னதாக ஒன்றிய அரசு, தேசிய தலைநகரில் உள்ள ராஜ பாதையை, கடமைப் பாதை என்றும், ரேஸ் கோர்ஸ் சாலையை லோக் கல்யான் மார்க் என்றும், இந்தியா கேட் அறுங்கோண முக் கோண பகுதியில் உள்ள அவுரங் கசீப் சாலை மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெய ரையும் சூட்டியிருந்தது குறிப்பிடத் தக்கது

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *