ஒன்றிய அரசு துறைகளில் 9.8 லட்சம் பணியிடங்கள் காலி

1 Min Read
இந்தியா

 புதுடில்லி, பிப்.7 நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு ஒன்றிய அரசு பணி வழங்கும் ரோஜ்கர் மேளாவை (வேலை வாய்ப்பு திருவிழா) பிரதமர் மோடி கடந்த அக்டோபரில் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டம் மற்றும் ஒன்றிய அரசு பணி காலியிடங்கள் குறித்த விவரங்களை பாஜக நா£ளுமன்ற உறுப் பினர் சுஷில் குமார் மோடி மாநிலங்களவையில் கோரியிருந்தார். இதற்கு ஒன்றிய பணியாளர், பயிற்சித் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: தாழ்த்தப் பட்ட, பழங்குடி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட, உயர்ஜாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடு களின் அடிப்படையில் காலியிடங்கள் நிரப்பப்படும். கடந்த 2021 மார்ச் 3-ஆம் தேதி நிலவரப்படி ஒன்றிய அரசின் 78 துறைகளில் 9.8 லட்சம் காலியிடங்கள் உள்ளன. இதன்படி அதிகபட்சமாக ரயில்வே துறையில் 2.93 லட்சம் கோடி காலியிடங்கள் இருக்கின்றன. இதற்கு அடுத்து ஒன்றிய பாதுகாப்புத் துறை யில் 2.64 லட்சமும், உள் துறையில் 1.43 லட்சம் காலி பணியிடங்களும் உள்ளன. அஞ்சல் துறையில் 90,050, வருவாய் துறையில் 80,243, கணக்கு தணிக்கையில் துறை யில் 25,934, அணுசக்தி துறை யில் 9,460 உட்பட பல்வேறு துறைகளில் காலியிடங்கள் இருக்கின்றன. ஒட்டுமொத்த மாக 9,79,327 காலியிடங்கள் உள்ளன. ரோஜ்கர் மேளா திட்டத்தின் மூலம் இந்த காலியிடங்கள் நிரப்பப்படும். இவ் வாறு அமைச்சர் ஜிதேந்திர சிங் பதில் அளித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *