தமிழுக்கு ரூ.11.86 கோடி சமஸ்கிருதத்துக்கு ரூ.198 கோடியா? மக்களவையில் கனிமொழி கேள்வி

2 Min Read
இந்தியா

புதுடில்லி, பிப்.8 மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் மீது திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி நேற்று (7.2.2023) பேசினார். அப் போது, “சமூகநீதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் நாங்கள் முன் மாதிரியாக இருக்கிறோம். நீங்கள் தோற்றிருக்கிறீர்கள். ஆன் லைன் ரம்மி தடை மசோதா உள்பட தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற் றிய 20க்கும் மேற்பட்ட சட்ட வரை வுகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கா மல் தாமதப்படுத்தி வருகிறார்.

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு மட்டும் நிற்கவில்லை. மாநில ஆளுநர்கள் ஒன்றிய அரசின் கரு வியாக பயன்படுத்தப்படுத்து கிறார்கள். பாஜக ஆளாத மாநி லங்களுக்கு அனுப்பி வைக்கப் படும் ஆளுநர்களிடம் அம்பேத்கரின் அரசியல் சாசனத்தை கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள்” என்று காட்டமாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து, இந்த முறை பட்ஜெட்டில் நீங்கள் திருக் குறளை மறந்துவிட்டீர்கள். ஏனெனில் இப்போது தமிழ்நாட் டில் பொதுத் தேர்தல்கள் எதுவும் நடைபெற வில்லை என்று குறிப் பிட்ட அவர், “ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே கலாச் சாரத்தை உருவாக்க பாஜக நினைக்கிறது. ஆனால், பாஜக நினைப்பது ஒருபோதும் நடக் காது” என்றும் கூறினார்.

மேலும், பிரதமர் மோடி தமிழின் உன்னதத்தைப் பற்றி அவ்வப்போது பேசுகிறார். ஆனால், நிதி ஒதுக்கீடு என்று வரும்போது மத்திய சமஸ்கிருத பல்கலைக் கழகத்துக்கு 198.83 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள் ளது. தமிழ் மத்திய செம்மொழி ஆய்வு மய்யத்திற்கு ரூ.11.86 கோடிதான் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்த பணம் நிர்வாக செலவு களுக்கே போதாது. பிறகு எங்கே ஆய்வு நடத்துவது, நிகழ்ச்சிகளை நடத்துவது என்ற கேள்வியை எழுப்பிய அவர்,கீழடி ஆராய்ச்சி முடிவுகளில் கி.மு.600க்கும் முற் பட்ட சான்றுகள் கிடைத் துள்ளன. ஆனால், அதனை வெளியிடுவதில் கூட ஒன்றிய அரசு ஆர்வம் காட்டவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு 4 ஆண்டுகளுக்கு முன்னர் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பிறகு எந்த வேலையும் நடக்கவில்லை. இப்படி நீங்கள் எங்களை தொடர்ந்து அவமதித்தால் இந்த நாட்டு மக்கள் உங்களோடு இணைந்து நடக்க மாட்டார்கள்” என்று பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *