வங்கிகளுக்கு ரூ.10.34 கோடி அபராதம் ரிசர்வ் வங்கி நடவடிக்கை

1 Min Read

புதுடில்லி, நவ.25 விதிகளை மீறியதற்காக சிட்டி வங்கி, பாங்க் ஆப் பரோடா மற்றும் அய்ஓபி ஆகியவற்றுக்கு ரிசர்வ் வங்கி மொத்தம் ரூ.10.34 கோடி அபராதம் விதித்துள்ளது. 

வங்கிகளுக்கான விதிமுறைகளை கடைப்பிடிக்காததற்காக சிட்டி வங்கி, பாங்க் ஆப் பரோடா, அய்ஓபி ஆகிய வற்றுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித் துள்ளது. இதில் அதிகபட்சமாக சிட்டி வங்கிக்கு ரூ.5 கோடி விதிக்கப்பட்டுள்ளது. டெபாசிட் தாரர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற விதிமுறையை கடைப் பிடிக்காததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோல், பெரிய அளவில் கடன்களை திருப்பிச் செலுத் தாதவர்கள் விவரங்களை தொகுத்து வைக்காததற்காக பாங்க் ஆப் பரோடா வுக்கு ரூ.4.34 கோடி அபராதம் விதிக்கப்பட் டுள்ளது. கடன்கள் தொடர்பாக ரிசர்வ் வங்கி விதித்த விதிகளை மீறியதற்காக இந்தியன் ஓவர் சீஸ் வங்கிக்கு (அய்ஓபி) ரூ.1 கோடி என மொத்தம் ரூ.10.34 கோடி அபராதம் விதிக்கப்பட்டள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *