பட்டுக்கோட்டை அ.ஆரோக்கியராஜ் படத்திறப்பு

1 Min Read
மற்றவை

பட்டுக்கோட்டை, பிப். 11- பட்டுக்கோட்டை ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் மறைந்த அ.ஆரோக்கியராஜ் அவர்களின் படத்திறப்பு 05.02.2023 அன்று மதியம் 2 மணி அளவில் அவரது இல்லத்தில் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் பெ. வீரையன் தலைமையிலும் ஒன்றிய தலைவர் ரெ.வீரமணி , நகர கழக தலைவர் பொறியாளர் சிற்பி சேகர் முன்னிலையிலும் திராவிடர் கழகம் உள்ளிட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்று மறைந்த அ.ஆரோக்கியராஜ் அவர்கள் திராவிடர் கழகத்திற்கு ஆற்றிய தொண்டினையும், அவரது சிறப்பு இயல்புகளையும் எடுத்துக் கூறி நினைவேந்தல் உரையாற்றினார்கள்.

மறைந்த அ.ஆரோக்கியராஜின் படத்தை மாவட்ட வழக்குரைஞர் அணி தலைவர் அ.அண்ணாதுரை திறந்து வைத்தார்.

நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் அரு. நல்லதம்பி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் அ.இரத்தினசபாபதி,  மாவட்ட ப.க செயலாளர் புலவஞ்சி காமராஜ் , மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் முத்து. துரைராஜ், மாவட்ட ப.க துணை செயலாளர் சிவஞானம், ஒன்றிய செயலாளர் ஏனாதி இரங்கசாமி, மதுக்கூர் சரவணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி செயலாளர் சக்கரவர்த்தி வீரக்குறிச்சி ஜேசு மற்றும் வீரகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் இரங்கல் உரையாற்றினர்.

இந்நிகழ்வில் ஏராளமான கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *