ஜாதி மறுப்பு – சுயமரியாதை இணை ஏற்பு விழா

1 Min Read

திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நடத்தி வைத்தார்

அரசியல்

சேலம் மாவட்டம் ஓமலூர், கோட்டை மேட்டுப்பட்டி   மு.அ.சங்கர்-பதியா இணையரின் மகள் மருத்துவர் திவ்யா அரிய லூர் மாவட்டம் செந்துறை, பூமுடையான் குடிகாடு ஏ.ரவிச்சந்திரன்-செல்வி இணையரின் மகன் ராமச்சந்திரன் ஆகியோரின் ஜாதி மறுப்பு – சுயமரியாதை இணை ஏற்பு விழாவினை திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நடத்தி வைத்தார். உடன் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன், தி.மு.க. மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் அ.தமிழரசு, தலைமை கழக அமைப்பாளர்கள் ஊமை.ஜெயராமன், கா. நா.பாலு, மாவட்ட காப்பாளர் சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியம், மேட்டூர் மாவட்ட தலைவர் க. கிருஷ்ணமூர்த்தி, சேலம் பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் வீரமணி ராஜு, பொதுக்குழு உறுப்பினர் பெ.சவுந்தரராசன்,  இராவண பூபதி, மணமக்கள் குடும்பத்தினர் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளனர். (29.10.2023)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *