பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறியவருக்கு பிறந்த குழந்தைக்கு என்ன பெயர்?

Viduthalai
2 Min Read

கொச்சி, பிப்.13 ஆணாக இருந்து பெண்ணாக மாறியதால் ஜியா பவல் பெயர் தாய்க்கு உரிய இடத்திலும், ஜஹாத் பெண்ணாக இருந்து ஆணாக மாறியதால் அவர் பெயர் தந்தைக்குரிய இடத்திலும் இருக்க வேண்டும் என்று அந்த இணையர் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் முதல் முறையாக பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய திருநம் பிக்கும், ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய திருநங்கைக்கும் பிறந்த குழந் தைக்கு பிறப்பு சான்றிதழ் வழங்குவது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த ஜியாபவல் (வயது 21) ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய திருநங்கை ஆவார். இதே போல் ஜஹாத் பெண் ணாக பிறந்து ஆணாக மாறிய திருநம்பி. இவர்கள் இருவரும் மாற்று பாலினத் தவர் என்பதால் இளம் வயதிலேயே வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்தனர்.இவர்கள் தங்களுக்கென ஒரு குழந்தை வேண்டும் என்று கனவு கண்டனர். இதையடுத்து இவர்கள் கோழிக்கோடு அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவர்களின் ஆலோ சனையை பெற்றனர். பெண்ணாக இருந்து ஆணாக   ஜாஹத் மாறிய போதும் அவரது கருப்பை அகற்றப் படாததால் அவர்கள் கருத்தரிப்பது சாத்தியம் என மருத்துவர்கள் தெரிவித்து உரிய ஆலோசனை வழங்கினர்.

இந்நிலையில் ஜஹாத் கர்ப்பம் தரித்தார். கடந்த சில தினங்களுக்கு முன் நடனக்கலைஞரான ஜியாபவல் ஜஹாத் கர்ப்பமாக இருந்ததைத் தனது இன்ஸ் டாகிராமில் பதிவு செய் திருந்தார். இந்நிலையில் 8.2.2023 அன்று காலை 9.30 மணியளவில் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது.

இந்த தகவலை ஜியா பவல் மகிழ்ச் சியுடன் பகிர்ந்திருந்தார். மேலும் ஜஹாத்தும், குழந்தையும் நலமாக உள்ளனர். ஆனால் குழந்தை ஆணா , பெண்ணா என்பதை இப்போது பொது வெளியில் கூற விரும்ப வில்லை என தெரிவித்துள்ளனர். 

மேலும் ஜியா பவல் தனது சமூக வலைதளப் பதிவில் தனது குழந்தையின் கையை பிடித்திருப்பது போன்ற படத்தை வெளியிட்டிருந்தார். குழந்தை பெற்றுள்ள மாற்றுப்பாலின இணைய ருக்கு பல்வேறு தரப்பினரும் சமூக வலை தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் இந்தியாவில் பெண் ணாக பிறந்து ஆணாக மாறியவர் குழந்தை பெற்றது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *