ஏடிஎம் கொள்ளையை தடுக்க ஏடிஎம் மய்யத்தையும் காவல் நிலையத்தையும் இணைக்க அலாரம்!

1 Min Read

சென்னை, பிப்.14 சென்னையில் நேற்று காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, சட்டம்-ஒழுங்கு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். வங்கி ஏடிஎம் கொள்ளையை தடுக்க, அருகில் உள்ள காவல் நிலையத் துடன் ஏடிஎம் அலாரத்தை இணைக்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகளுக்கு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு அறிவுறுத்தினார். திரு வண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் களை உடைத்து, பணத்தைக் கொள்ளை யடித்தவர்களைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இந் நிலையில், மீண்டும் இதுபோன்ற கொள்ளை நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்பதில்   காவல் துறையினர் உறுதியாக உள்ளனர். இதையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளின் பிரதிநிதிகளுடன் காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு  ஆலோசனை நடத்தினார். காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட் டத்தில், 51 வங்கிகளின் பொது மேலாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதில், வங்கி அதிகாரி களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங் கிய காவல்துறை தலைமை இயக்குநர் அவற்றை உடனடி யாக செயல்படுத்துமாறு அறிவுறுத்தினார். வங்கி, ஏடிஎம் மய்யங்களில் உள்ள பணத்தைக் கண்காணிக்க, மறைமுக கேமராக்களை நிறுவ வேண்டும். முகத்தை அடையாளம் காண உதவும் மென்பொருள் அடங்கிய கேமராக்களை அனைத்து ஏடிஎம்களிலும் பொருத்த வேண்டும். ஏடிஎம்கள் உடைக் கப்படும்போது எச் சரிக்கை மணி வங்கியில் மட்டுமின்றி, அருகில் உள்ள காவல் நிலையங்களில் ஒலிக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். கொள்ளையர்களின் முகம் தெளிவாகத் தெரியும்வகையில், ஏடிஎம் மய்யங்களில் அதிநவீன கண்காணிப்புக் கேமராக்களை பொருத்த வேண்டும். மேலும், ரகசியக் கேமராக்களையும் பொருத்த வேண்டும் என்று காவல்துறை தலைமை இயக்குநர் கூறினார். இவற்றை உடனடியாக நடை முறைப்படுத்துவதாக வங்கி அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *