மகாராட்டிரா மாநில ஆட்சிக் கவிழ்ப்பு வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதியின் கிடுக்கிப்பிடி!

2 Min Read

இந்தியா

புதுடில்லி, பிப் 18 மகாராட்டி ராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கடந்த ஆண்டு கவிழ்ந்த விவகாரத்தில், அம்மாநில ஆளுநரின் செயல்பாடு ஒரு சார்பாக இருந்ததாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்குகளில் 15.2.2023 அன்று நடைபெற்ற விசாரணையின்போது ஆளுநர் சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்ட சிவ சேனா, தேர் தலுக்குப் பின்னர் சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபட்டு காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி யில் இணைந்து ஆட்சியை அமைத் ததாகக் குற்றம்சாட்டினார். இது சித்தாந்த ரீதியில் வாக்களித்த மக் களை ஏமாற்றும் செயல் என்றும் அவர் விமர்சித்தார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி சந்திரசூட், ”ஆளுநர் தரப்பில் இத்தகைய வாதங்களை முன்வைப்பது எவ்வாறு சரியாக இருக்க முடியும்? சிவ சேனா வேறு கட்சிகளுடன் சேர்ந்து அரசமைக்க முன்வந்தால், அது ஆளுநரை எவ்வாறு பாதிக் கும்? ஆளுநரைப் பொறுத்தவரை, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோர முடி யும். அரசியல் களத்துக்குள் அவர் நுழையக் கூடாது” என்று தெரிவித்தார்.

இதையடுத்துப் பேசிய துஷார் மேத்தா, தான் முன்வைத்த வாதங்கள் ஆளுநரின் வாதங்கள் அல்ல என்றும், சட்டப்பேரவை உறுப்பினர்களின் உள்ளுணர்வை பிரதிபலிக்கும் நோக்கில் முன் வைக்கப்பட்டவை என்றும் விளக்கம் அளித்தார். காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்த உத்தவ் தாக் கரேவின் செயல், தனது கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களின் உள்ளுணர்வை பிரதிபலிக்க வில்லை என்றும் அவர் விமர் சித்தார்.

இதற்கு உத்தவ் தாக்கரே தரப் பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். சித்தாந்த அரசியல் குறித்தோ, யார் யாருடன் கூட் டணி அமைக்க வேண்டும் அல்லது கூட்டணி அமைக்கக் கூடாது என் பது குறித்தோ ஆளுநர் எவ்வாறு கூற முடியும் என கேள்வி எழுப்பிய அவர், துஷார் மேத்தாவின் வாதங்கள் ஏற்கத்தக்கதல்ல என குறிப்பிட்டார்.

இரு தரப்பு வாதத்தையும் கேட்ட தலைமை நீதிபதி இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மாற்றலாமா என்று கேள்வி எழுப் பினார். மேலும் விசாரணையை   ஒத்தி வைத்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *