மகாசிவராத்திரியின் ‘மகிமையோ மகிமை!’

1 Min Read

லக்னோ, பிப். 20- ‘புனித’ நீராடச் சென்ற 5 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயினர்.

 உத்தரப் பிரதேச மாநிலத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆற்றில் ‘புனித’ நீராட சென்ற 5 மருத்துவ மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 18.2.2023 அன்று இரவு மகா சிவராத்திரியை முன்னிட்டு அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 5 மாணவர்கள் படவுனில் உள்ள கங்கை ஆற்றில் ‘புனித’ நீராட சென்றனர். இந்த நிலையில் ஆழமான பகுதிக்கு அவர்கள் சென்றதால் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து காணாமல் போன அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. இந்த நிலையில் அவர்களில் 2 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இன்னும் 3 பேரின் நிலைமை என்னவானது என்று தெரியவில்லை. மாநில பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து அவர்களைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து காணாமல் போன மாணவர்களின் குடும்பத்திற்கு தகவல் அளித்துள்ளதாக அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *