மேனாள் அமைச்சர் சத்தியவாணி முத்துக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் புகழாரம்

1 Min Read

தமிழ்நாடு

சென்னை, பிப். 20-  அடையாறில் நடைபெற்ற மேனாள் அமைச்சர் சத்தியவாணி முத்து நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் பேரவை அரங்கில் திமுக மகளிர் அணி சார்பில் மேனாள் அமைச்சர் சத்தியவாணி முத்து நூற்றாண்டு விழா நேற்று (19.2.2023) நடை பெற்றது. இந்த விழாவில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:- தி.மு.க.வின் பெண்சிங்கமாக வாழ்ந்தவர் சத்தியவாணி முத்து. அரசியலுக்கு வரும் பெண்களுக்கு வழி காட்டியாக திகழ்ந்தவர். அகில இந்திய தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆணைய தலைவராக சத்தியவாணி முத்துவை, முத்தமிழறிஞர் கலைஞர் பரிந்துரைத்திருந்தார். ஆனால், அப்போது ஆட்சி கலைக்கப்பட்டதால் அது நிறைவேற்ற வில்லை. போராட்ட குணம், தியாக  உணர்வு, அசைக்க முடியாத கொள்கை பற்றும் கொண்டவராக இறுதி மூச்சுவரை இருந்த காரணத் தினால் சத்தியவாணி முத்து இன்றைக்கும் போற்றப்படுகிறார். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *