ஹிண்டன்பர்க் அறிக்கை – உச்சநீதிமன்றம் உத்தரவு

1 Min Read

இந்தியா

புதுடில்லி, பிப். 20- அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

அதானி குழுமம் மீதான அமெரிக்க நிறுவனம் ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் 2 பொது நல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு பரிந்துரைத்த நிபுணர் குழுவை நியமித்தால் அந்த குழு அரசு நியமித்தத்தாகவே கருதப்பட நேரிடும். அதானி குழுமம் மீதான ஹிண்டன்பெர்க் அறிக்கை குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என்றும் பொது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட  வேண்டுமெனில் உச்சநீதி மன்றமே நிபுணர் குழுவை நியமிக்க வேண்டும் என தலைமை நீதிபதி சந்திர சூட் தெரிவித்தார். நிபுணர்களின் பெயர்களை ஒன்றிய அரசு மூடி முத்திரை வைத்த கவரில் வழங்கினால் நாங்கள் ஏற்க மாட்டோம் என கூறினார். மேலும் அரசு பரிந்துரைத்த நிபுணர் குழுவைந நியமித்தால் அந்த குழு அரசு நியமித்ததாகவே கருதப்பட நேரிடும் என்று நீதிபதி தெரிவித்தார். அதானி – ஹிண்டென்பர்க் அறிக்கை குறித்த விவகா ரத்தில் குழு அமைப்பது தொடர்பாக உத்தரவை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது .

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *