தமிழ்நாடு முன்னோடி 3,315 பேர் உடலுறுப்பு கொடை செய்ய பதிவு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழ்நாடு

சென்னை, நவ.25 தமிழ்நாடு முழுவதும் இதுவரை 3,315 பேர் உடலுறுப்பு கொடை செய்ய பதிவு செய்துள்ளதாக மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ் வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார். 

சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நேற்று (24.11.2023) மூளைச்சாவு அடைந்து, உடல் உறுப்புகள் கொடை செய்த ராமாபுரத்தைச் சேர்ந்த பார்த்திபன் (32) என் பவரின் உடலுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத் தினார். ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் கடந்த 11ஆம் தேதி விபத்தில் சிக்கி, தலையில் பலத்த காயங்களுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவ மனை யில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சி.டி.ஸ்கேன் எடுத்து பார்த்ததில் மூளையில் ரத்தக்கசிவு இருப்பது கண்ட றியப்பட்டு அதற்கான தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் 23.11.2023 அன்று அவர் மூளைச் சாவு அடைந் திருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். பார்த்திபனின் தாயார் மற்றும் அவரது உறவினர்களிடம் உடலுறுப்பு கொடை பற்றி சொன்னவுடன், பார்த்திபனின் தாயார் தனது மகன் உயிர் இப்போது பிரிந் திருந்தாலும், அவனது உடலு றுப்புகள் வேறு பலரின் மூலம் வாழ்வது எனக்கு நிறைவைத் தருகிறது என்று கூறி உடலு றுப்பு கொடைக்கு அனுமதித் திருக்கிறார்.

பார்த்திபனின் கல்லீரல், 2 சிறுநீரகங்கள், கண்கள் மற்றும் தோல் ஆகியவை பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகை யில், ‘‘கடந்த இரண்டு மாதங் களில் 30ஆவது மூளைச்சாவு அடைந்தவரிடமிருந்து உடலு றுப்புகள் கொடை பெறப் பட்டுள்ளது. இது இந்திய வரலாற்றில் அல்ல. உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய சாதனை. தமிழ்நாடு முழுவதும் இதுவரை 3,315 பேர் உடலுறுப்பு கொடை செய்வதற்கு பதிவு செய்திருக்கிறார்கள் உடலுறுப் புகளுக்காக காத்திருக்கிறார்கள்’’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *