காரைக்குடி சுயமரியாதைச் சுடரொளி ‘பாவலர் மணி’ ஆ.பழனி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு காரைக்குடி குறள் அரங்கில் அனிச்சம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. நிகழ்வில் மாவட்ட காப்பாளர் சாமி திராவிடமணி, குமணன் முடியரசன், மாவட்ட தலைவர் ம.கு. வைகறை, மாவட்டச் செயலாளர் சி.செல்வமணி, மாவட்ட ப.க செயலாளர் ந.செல்வராசன், கல்லல் ஒன்றிய செயலாளர் கொரட்டி வி.பாலு மற்றும் பாவலர் குடும்ப உறுப்பினர்கள் நாராயணன், உமையாள், மணிமேகலை, சண்முகம் , பேரன் காசிநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.