எதிர்காலம் பெண்கள் கையில்

Viduthalai
0 Min Read

குழந்தைகளின் உற்பத்திப் பீடமாயுள்ள பெண்கள் திருந்தினாலொழிய அவர்களிடமிருந்து உற்பத்தியாகும் குழந்தைகளும் திருந்திய குழந்தைகளாயிருக்க முடியாது என்பதை மனத்தில் கொள்ளுங்கள். வளம் செய்யப்பட்ட மண்ணில் எப்படி நல்ல நெல் மணிகள் தோன்றுமோ, அதுபோலவே சீர்திருத்த மனம் படைத்த அறிவுள்ள பெண்களிடமிருந்து தான் சீர்திருத்த அறிவுள்ள செம்மல்கள் தோன்றக்கூடும் என்பதைத் தாய்மார்கள் உணர்ந்து, முதலில் தம்மைச் செம்மைப்படுத்திக் கொள்ளட்டும்.  

‘விடுதலை’ 2.1.1948

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *