உத்தரப்பிரதேச மாநில பாஜக அரசின் நிதிநிலை அறிக்கையில் மகா கும்ப மேளாவுக்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடாம்

1 Min Read

லக்னோ,பிப்.23- உத்தர பிரதேசத்தில் 2023-_2024 நிதியாண்டுக்கான நிதி அறிக்கை 22.2.2023 அன்று தாக்கல் செய்யப் பட்டது. 2025-இல் நடை பெறும் மகா கும்ப மேளாவின் முன்னேற் பாடு பணிகளுக்காக ரூ.2,500 கோடியை உத்தரப் பிரதேச மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

மாநில பட்ஜெட்டை நிதியமைச்சர் சுரேஷ் குமார் கண்ணா தாக்கல் செய்தார். 12 ஆண்டுக ளுக்கு ஒரு முறை நடை பெறும் மகா கும்ப மேளா நிகழ்வு 2025-ஆம் ஆண்டில் நடைபெறு கிறது. இந்த நிகழ்வின் முன்னேற்பாடு பணி களுக்காக ரூ.2,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவ தாக அமைச்சர் அறிவித்தார். நடப்பு நிதி யாண்டுக்கான (2022-_2023) பட்ஜெட்டில் ரூ.621 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பட்ஜெட் தாக்கல் செய்து அவர் கூறியதாவது: அயோத்தி ராமர் கோயில் மூலம் சுற்றுலா வுக்கான வாய்ப்புகள் அதிகரிக்க உள்ளது. இதற்காக 3 சாலைகளை அகலப்படுத்தி அழகுப் படுத்தும் பணிகள் அடுத்த ஆண்டில் முடிவடையும்.

கடந்த 2022-இல் 24 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் உத்தர பிரதேச மாநிலத் துக்கு வருகைப் புரிந்துள் ளனர். இவர்களில் 4 லட்சம் பேர் வெளிநாட்டு பயணிகள் என அவர் தெரிவித்தார்.

பவுத்தத்தை மய்யமாகக் கொண்ட சுற்று லாவை மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *