ஆறு வயதில் தான் குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்க்க வேண்டும் ஒன்றிய அரசு உத்தரவு

1 Min Read

புதுடில்லி, பிப்.24 அரசு பள்ளிகளில் முதல் வகுப்பில் மாணவர்களை சேர்க்க குறைந்தபட்ச வயதை ஆறு என நிர்ணயிக்க வேண்டுமென அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங் களுக்கும் ஒன்றிய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.  புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி மூன்று முதல் எட்டு வயது குழந்தைகளுக்கான அடிப்படை கல்வி நிலைகள் 5 ஆண்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.  இதில் பள்ளிக்கு முந்தைய கல்வி 3 ஆண்டுகள் என்றும், அதன் பின் முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு கல்வி நிலை இடம்பெற்றுள்ளது.  இதில் புதிய கல்விக் கொள்கை, ஆரம்ப கல்வி முதல் இரண்டாம் வகுப்பு வரை தடையற்ற கற்றலையும், குழந்தைகளின் வளர்ச் சியையும் ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளது.   

இதற்கு அங்கன்வாடி அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் ஆரம்பக் கல்வி மய்யங் களில் மூன்று ஆண்டு தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது புதிய கல்விக் கொள்கையின் நோக்கமாகும். 

இதற்கு ஏற்ப 6 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்க்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச அரசுகளுக்கும் ஒன்றிய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *