நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் வலுவான ஆதாரங்களுடன் புதிய மனு தாக்கல்: உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணை!

2 Min Read

புதுடில்லி, பிப்.25- ‘நீட்’ நுழைவுத் தேர்வு தொடர்பாக அ.தி.மு.க. ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை திரும்பப்பெற தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித் துள்ளது. நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி தமிழ் நாடு அரசு தாக்கல் செய்துள்ள புதிய மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்து உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது.

நீட் தேர்வை மருத்துவ மாண வர் சேர்க்கைக்கான அடிப்படை தகுதியாக நிர்ணயித்திருப்பது அர சியல் சாசனத்துக்கு எதிரானது என பல வலுவான வாதங்களுடன் தமிழ்நாடு அரசு புதிய மனுவை கடந்த வாரம் தாக்கல் செய்தது.

நீட் தேர்வு, அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தும் மாநில அரசின் அதிகாரத்தைப் பறித்துவிட்டதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்தது. நீட் தேர்வு கூட்டாட்சி நடைமுறைக்கு எதிரானதாகவும், கல்வி மீதான மாநில அரசின் சுயாட்சிக்கு எதிராக உள்ளதாகவும் தமிழ்நாடு அரசு குறிப்பிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து வலுவான ஆதாரங்கள் இல்லாமல் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின் போது போடப்பட்ட மனுவை திரும்பப்பெற தமிழ்நாடு அரசு சார்பில் 23.2.2023 அன்று மனுதாக்கல் செய்யப்பட்டது.

 அந்த மனு நேற்று (24.2.2023) விசாரணைக்கு வந் தது. அப்போது நீட் விலக்கு கோரி புதிய மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் முந் தைய மனுவை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வழக்குரைஞர் அமித் ஆனந்த் திவாரி வாதிட்டார்.

தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ள தையும் அவர் சுட்டிக்காட்டினார். முந்தைய மனுவை எந்த அடிப் படையில் தாக்கல் செய்தனர்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், முந்தைய மனுவை திரும்பப் பெறுவது நல்ல முடிவு என்று தெரிவித்தனர்.

முந்தைய மனுவை திரும்பப் பெற அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தர விட்டனர்.

இதனைத் தொடர்ந்து, நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி தாக்கல் செய்யப்பட் டுள்ள புதிய மனு விரைவில் விசாரணைக்குப் பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *