தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார் எடியூரப்பா

Viduthalai
1 Min Read

பெங்களூரு பிப் 25- தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக கருநாடக சட்டமன்றத்தில் எடியூ ரப்பா அறிவித்தார். 

கரு நாடக சட்டமன் றத்தின் நிதிநிலை கூட்டத் தொடர் நடந்து வருகிறது. 

இந்தநிலையில், பா.ஜனதாவை சேர்ந்த மேனாள் முதல் அமைச் சர் எடியூரப்பா தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக ஏற் கெனவே அறிவித்தார். அவருக்கு நேற்று (24.2.2023) சபையில் வழி யனுப்பும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் பெரும் பாலான உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசி னர். அதன்பிறகு இறுதி யில் எடியூரப்பா உணர்ச்சி பூர்வமாக பேசினார். அப் போது அவர் கூறியதாவது:- 

எனது வாழ்க்கையின் கடைசி மூச்சு உள்ள வரை பா.ஜனதாவை பலப்படுத்த நேர்மையாக உழைப்பேன். கட்சியை ஆட்சிக் கட்டிலில் அமர வைப்பேன். இதில் யாருக் கும் சந்தேகம் வேண்டாம். எனக்கு பா.ஜனதா அநீதி இழைத்ததாகவும், புறக் கணித்து விட்டதாகவும் சிலர் விமர்சிக்கிறார்கள். ஆனால் பா.ஜனதா மற் றும் பிரதமர் மோடி என்னை ஓரங்கட்டியதே இல்லை. பிரதமர் மோடி எனக்கு உரிய பதவி மற் றும் கவுரவத்தை வழங்கி னார். இதற்காக அவருக்கு நான் நன்றிக்கடன் பட் டுள்ளேன். கட்சி எனக்கு கொடுத்த பதவி, வாய்ப்பு களை நான் மறக்கவே மாட்டேன். தேவேகவுடா எனக்கு ஒரு வழிகாட்டி. அவரை பார்த்து கற்றுக் கொள்ள நிறைய உள்ளது. இந்த வயதிலும் தேவே கவுடா பிரச்சினைகளை பற்றி பேசுகிறார். நான் அரசியலில் இந்த உயரத் திற்கு வளர ஆர்.எஸ்.எஸ். தான் காரணம். நான் அங்கு பயிற்சி பெற்றதால் தான் எனக்கு பல பதவி கள் கிடைத்தன. நான் இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன். தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன். ஆனால் மாநிலம் முழுவதும் சுற் றுப்பயணம் செய்து கட் சியை ஆட்சியில் அமர்த்த பாடுபடுவேன். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *