நெல்லூர், பிப்.27 ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் பொடலகுரு அருகே தோடேரு கிராமத்தில் உள்ள ஏரியை சுற்றிப் பார்ப்பதற்காக 10 பேர் மீன்பிடி படகில் சென்றுள்ளனர். படகு புறப்பட்டுச் சிறிது தூரம் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக் குள்ளானது. அதில் பயணம் செய்த 10 பேரும் தண்ணீரில் மூழ்கினர். அதில் 6 பேர் உயிரிழந்தனர்.