ஒரு நாரையின் விசுவாசம்

1 Min Read

அரசியல்

அமேதி, பிப். 28- உத்தரப் பிரதேசம் மாநிலம் அமேதி மாவட்டம் மந்த்கா மஜ்ரே அவுரங்காபாத் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது ஆரிப். கடந்தாண்டு வயல்வெளியில் நாரை ஒன்று கால் உடைந்து தவித்துக் கொண்டிருந்தது. அதை வீட்டுக்கு தூக்கி சென்று கட்டுப் போட்டார் ஆரிப். அது குணமடையும் வரை அதற்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கினார். குணமடைந்தபின் அதை வனப்பகுதிக்கு எடுத்துச் சென்று பறக்கவிட்டார். ஆனால் அந்த நாரை முகமது ஆரிப் வீட்டுக்கு திரும்பி வந்து, அவரது வீட்டிலேயே நிரந்தரமாக தங்கியது.

அவர் இரு சக்கர வாகனத்தில் 40 கி.மீ. தூரம் சென்றால் கூட, அந்த நாரை, அவருக்கு மேலே பறந்து செல்கிறது. அந்த அளவுக்கு முகமது ஆரிப்புக்கும், நாரைக்கும் இடையே பிணைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த காட்சிப்பதிவு வைரலாக பரவியுள்ளது. சமூக ஊடகங்களில் இந்த காட்சிப்பதிவைப் பார்ப்பவர்கள், உண்மையான ‘ஜெய்-வீரு’ இவர்கள்தான் எனகூறுகின்றனர். ‘ஷோலே’ படத்தில் ‘ஜெய்-வீரு’ என்ற இரு கதாநாயகர்களும் இணை பிரியாமல் இருப்பது போல் ஆரிப்பும் – நாரையும் எப்போதும் சேர்ந்து காணப்படுகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *