1543 கோடி ரூபாய் செலவில் பேருந்து நிலையங்கள் நவீன மயம்

1 Min Read

சென்னை, பிப். 28- ரூ.1543 கோடி மதிப்பீட்டில் 3 பேருந்து முனையங்களை நவீனமயமாக்க ஒப்பந்தப் புள்ளியை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. 

திருவான்மியூர், வடபழனி, வியாசர்பாடி ஆகிய மூன்று  பேருந்து நிலையங்கள் ரூ.1543  கோடி மதிப்பில் நவீன மயமாக்கப்பட்ட உள்ளன. வணிக வளாகங்கள், அடுக்கு மாடி வாகன நிறுத்தங்கள், நவீன கழிப்பறைகள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் மூன்று பேருந்து முனையங்களும் புதுப்பிக்கப்பட உள்ளன.

திருவான்மியூர் பேருந்து முனையம் ரூ.446 கோடி மதிப்பிலும், வடபழனி பேருந்து முனையம் ரூ. 610 கோடி மதிப்பிலும், வியாசர்பாடி பேருந்து முனையம் ரூ.485 கோடி மதிப்பிலும் நவீன மயமாக்கப்பட உள்ளன. மழைக் காலங்களில் மழைநீர் தேங்கி  நிற்காத வகையிலும், மழைநீர் வடிகால் வசதியுடனும் பேருந்து முனையங்கள் புதுப்பிக்கப்பட உள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *