மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதா? ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது

1 Min Read

அரசியல்

புதுடில்லி, மார்ச் 1- மனிதக் கழிவு களை மனிதர்களே அள்ளும் முறையை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக டாக்டர் பல்ராம் சிங் என்பவர் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் (பிஅய்எல்) கூறியிருப்பதாவது:

உச்ச நீதிமன்றம் தனது 2014ஆம் ஆண்டு உத்தரவில் கழிவுகளை அள்ளும் தொழிலாளர்களை கண் டறிந்து அவர்களது மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்று ஒன்றிய அரசுக்கும், மாநில அரசு களுக்கும் வழிமுறைகளை வழங்கி யது. ஆனால் அது இன்னும் நடை முறைப்படுத்தப்படவில்லை. இவ் வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.ஆர். பட், தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக 6 வாரங்களுக்குள் அறிக்கையை ஒன்றிய அரசு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தர விட்டனர்.  மேலும் 2014இல் உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவின் படி நடவடிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். இதைத் தொடர்ந்து வழக்கு ஏப்ரல் 12ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப் பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *