ஜெனிவாவில் நடந்த அய்.நா. குழு கூட்டத்தில் நித்யானந்தாவின் பிரதிநிதி பேச்சு தள்ளுபடி!

2 Min Read

ஜெனிவா,மார்ச் 4- அய்க்கிய நாடுகள் சபை கூட்டத்தில், நித்யா னந்தாவின் பிரதிநிதிகள் பேசிய கருத்துகளை புறக்கணித்து விட்ட தாக அய்.நா. அறிவித்துள்ளது. இந் தியாவில் காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் சாமியார் நித் யானந்தா கைலாசா என்று தனித் தீவு நாட்டுக்கு அதிபர் என்று கூறி காட்சிப் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். 

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி ஜெனிவாவில்  அய்.நா. பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் நித்யானந்தாவின் கைலாசா பிரதிநிதிகளாக சில பெண்கள் கலந்து கொண்டனர். அதில் கைலாசாவின் நிரந்தர பிரதிநிதி விஜய பிரியா என்பவர், ஆன்மீக தலைவரான நித்யானந்தாவை கொடுமைப் படுத்துகின்றனர். சொந்த நாடே அவருக்கு தடை விதித்து விட்டது என்று பேசியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான ஒளிப் படங்கள் வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது. கைலா சாவை அய்.நா. அங்கீகரித்து விட் டதா என்பது போன்ற கேள்வி களும் எழுந்தன. 193 நாடுகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள அய்.நா.வில் கைலாசா இடம் பெறவில்லை. 

அய்.நா.வில் இடம் பெற அய்.நா. பொதுச்சபை மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் அனுமதி வேண்டும். ஆனால் ஜெனிவாவில் செயல்படும் அய்.நா. மனித உரி மைகள் அமைப்பு. தங்கள் கூட்டத் தில் எந்த அமைப்பை சேர்ந்தவர் களும் பேச அனுமதி அளிக்கிறது.

இதைப் பயன்படுத்தி அய்.நா.வில் கைலாசா பிரதிநிதி பேசிய தால், கைலாசாவை அய்.நா. அங்கீ கரித்து விட்டதான ஒரு மாயத் தோற்றத்தை நித்யானந்தா ஏற் படுத்த முயற்சி செய்துள்ளார். 

இந்நிலையில், “கடந்த மாதம் நடைபெற்ற  அய்.நா. பொருளா தார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் குழு கூட்டத்தில் அரசு சாரா அமைப்புகளும் பதிவு செய்து கலந்து கொள்ளலாம். இதை பயன்படுத்தி நித்யானந் தாவின் பிரதிநிதிகள் பங்கேற்றுள் ளனர்.  தலைப்புடன் சற்றும்  தொடர் பில்லாத கருத்துகளை கைலாசா பிரதிநிதி பேசினார். அவர் பேசிய கருத்துகளை  அய்.நா. சபை முற்றிலும் புறக் கணித்து விட்டது” என்று அய்.நா. விளக்கம் அளித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *