எத்தகைய தாய் உள்ளம்!

Viduthalai
1 Min Read

நோயாளியின் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய பெண் காவலர்

இந்தியா

எர்ணாகுளம், நவ.25  கேரளாவில் பெண் காவலர் ஒருவர் மருத் துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வடமாநில பெண்ணின் குழந்தைக் குத் தாய்ப்பால் ஊட்டிய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி யுள்ளது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கேரள மாநிலத்தில் வசித்து வருகிறார். அவருக்கு நான்கு குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில், அந்தப் பெண் ணின் கணவர் ஏதோ வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேவேளையில் அந்தப் பெண்ணும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட் டிருந்தார். இதையடுத்து அந்தப் பெண் நான்கு குழந்தைகளுடன் எர்ணா குளம் மருத்துவமனைக் குச் சிகிச்சை பெற வந் திருந்திருக்கிறார். அப் போது பெண்ணின் உடல் நிலை சற்று ஒத்துழைக் காததால், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட் டார். அப்போது அவரின் மூன்று குழந்தைகளும், பாராமரிக்க யாருமின்றி வெளியே சுற்றி திரிந்த வண்ணம் இருந்திருக்கின் றனர். பிறந்து நான்கு மாதமே ஆன குழந் தையைகூட பராமரிக்க யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது. இந்த இக் கட்டான சூழலில்தான் 4 குழந்தைகளும், உதவிக் காக கொச்சி நகர மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப் பட்டனர்.

பின்னர், அந்த 4 மாதக் குழந்தை அழுதபடி இருந் திருக்கிறது. இதையடுத்து, 4 மாதக் கைக்குழந்தைக்கு சிவில் காவல் அதிகாரி யான ஆர்யா தாய்ப்பால் புகட்டினார். இது தொடர்பான நிழற்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பின்னர் குழந்தைகள் பராமரிப்பு இல்லத்துக்கு மாற்றப்பட்டனர். பெண் அதிகாரியின் தாய்மை குணம் அனைவராலும் மனதார பாராட்டப் பட்டு வருகிறது. ஆர்யா வும் ஒன்பது மாத குழந் தைக்கு தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *