வடமாநில தொழிலாளர் பிரச்சினை: தமிழ்நாடு அரசின் நடவடிக்கை திருப்தி பீகார் குழுத் தலைவர் பேட்டி

1 Min Read

இந்தியா, தமிழ்நாடு

சென்னை, மார்ச் 5 தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்களின் நிலை குறித்து அறிந்துகொள்ள பீகார், ஜார்க் கண்ட் மாநில அரசுகள் குழு அமைத்துள்ளன.  

பீகார் மாநில குழுவில் அம்மாநில கிராம வளர்ச்சித் துறை செயலாளர் பாலமுருகன் தலைமையில், சிறப்புச் செயலாளர் அலோக்குமார், காவல்துறை தலைமை இயக்குநர் கண்ணன் உள்ளிட்ட 4 பேரும், ஜார்க்கண்ட் மாநில குழுவில் காவல்துறை தலைமை இயக்குநர் தமிழ்வாணன், தொழிலாளர் நல இணை ஆணையர் ராகேஷ் பிரசாத், தொழிலாளர் கண்காணிப்பாளர் அபிஷேக் வர்மா, மாநில புலம்பெயர் தொழிலாளர் நலன் பிரதிநிதிகள் ஆகாஷ் குமார், சிக்கா ஆகிய 5 பேரும் இடம் பெற்றுள்ளனர்.

இக்குழுவினர் சென்னையில் தமிழ் நாடு தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், தொழிலாளர் நல ஆணையர் அதுல் ஆனந்த் மற்றும் அதிகாரிகள், வெளி மாநில குழுவினருடன் ஆலோசனை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பீகார் மாநில கிராம வளர்ச்சித் துறை செயலாளர் பால முருகன், தாக்குதல் தொடர்பான காட்சிப் பதிவுகளில் உண்மையில்லை என்பதை புலம்பெயர் தொழிலாளர்கள் உணரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *