திருவள்ளுவர் சிலையை காண சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!

1 Min Read

கன்னியாகுமரி, மார்ச் 6- கன்னியாகுமரியில் கடலின் நடுவேயுள்ள திருவள்ளுவர் சிலையை காண இன்று (6.3.2023) முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

பன்னாட்டு சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடலின் நடுவே 133 அடி உயரம் உள்ள திருவள்ளுவர் சிலை 2000 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி அன்றைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் திறந்து வைத்தார். 

கடலின் நடுவே அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் பாறைக்குச் செல்லும் சுற்றுலா பயணிகள் அப்படியே திருவள்ளுவர் சிலைக்கும் சென்று பார்வையிட்டு வந்தனர். 

கடலின் நடுவே உள்ள சிலை உப்புக்காற்று, மழை, வெயில் போன்றவற்றால் பாதிக்கப்படும் என்பதால் நான்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சிலை சுத்தம் செய்யப்பட்டு ராசயன கலவை பூசப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட பின்னர் 5 ஆவது முறையாக ரசாயன கலவை பூசும் பணி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. எனவே சுற்றுலாப் பயணிகள் திருவள்ளுவர் சிலைக்கு அனுமதிக்கப்பட வில்லை. சுமார் ரூ.1 கோடியே 10 லட்சம் செலவில் ரசாயன கலவை பூசும் பணிகள் நடைபெற்று வந்தது. 

இந்நிலையில், திருவள்ளுவர் சிலைக்கு கடந்த 7 மாதங்களாக நடைபெற்று வந்த ரசாயன கலவை பூசும் பணி நிறைவடைந்ததை அடுத்து புதுப்பொலிவுடன் தோற்றமளிக்கும் திருவள்ளுவர் சிலையை இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *